tamilnadu

img

63 பணி இடங்களுக்கு 30 ஆயிரம் வாலிபர்கள் குவிந்தனர்

நாசிக்,அக்.30-  ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று ‘முழங்கிய’ மோடியின் பாஜக ஆட்சியில், பீரங்கி படைப்பிரிவில் உள்ள 63 பணியிடங்களுக்கு 30 ஆயிரம் வாலிபர்கள்  குவிந்தனர். மராட்டிய மாநிலத்தின் நாசிக் நகரில் இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவிற்கு ஆள் எடுக்கும் முகாம் நடைபெற்றது. மொத்தம் 63  பணியிடங்களுக்கான இந்த ஆள் எடுக்கும் முகாமில் சுமார் 30 ஆயிரம் வாலிபர்கள் கலந்து கொண்டனர். 

ஒரே நேரத்தில் 30 ஆயிரம் பேர் கூடியதால் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இந்த பணிக்கு தேவையான கல்வித் தகுதி  10-12 ஆம் வகுப்பு ஆகும். ஆனால்  ஆள் சேர்ப்பு முகாமல் பல  பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகளும் கலந்து கொண்டனர்.  மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், ஆந்திரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும்  முகாமில் கலந்து கொண்டனர். இந்த மாத துவக்கத்தில், ஸ்ரீநகரில்  பிராந்திய இராணுவ பட்டாலியனுக்கான ஆள்சேர்ப்பு முகாமிற்கு இராணுவம் ஏற்பாடு செய்தது. இதில் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 6,500 வாலிபர்கள் பங்கேற்றனர்.